Saturday, January 17, 2009

திருமா.உண்ணாவிரதம்:விடுதலை சிறுத்தைகள் பேருந்துகளுக்கு தீ வைப்பு

திருமாவளவன் உண்ணாவிரதம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெருந்துகளுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை மறைமலை நகரில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு கூடியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில், உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அழிவின் விளிம்பில் 5 லட்சம் தமிழர்கள், இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து என்ற வாசகங்களும் போஸ் டர்களில் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே கடலூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் வன் முறைச்சம்பவங்கள் நடை பெற்றன.மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சிலர் கும்பலாக சென்று ஆங்காங்கே அரசு பஸ்களை கல்வீசி தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மதுரை அண்ணாநகர், செல்லூர் மதுரை புறநகர் பகுதியான ஒத்தக்கடை, குருத்தூர்பட்டி, செக்கானூரணி, கே.புளியங் குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் 15 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

மேலும் மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீவைக்கப்பட்டன. பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடந்தது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ்மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசயது.

இதனால் பஸ்சில் தீப்பிடித்தது. உடனே பயணி கள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர். இதில் பஸ்சின் இருக்கைகள் சேதம் அடைந்தன.

அலங்காநல்லூரில் இருந்து அழகர் கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. கும்பல் பஸ்சை மறித்ததும் பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.

இதே போல் பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே நேற்று இரவு 15-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து கல்வீசி தாக் கினர். உடனே பயணிகள் இறங்கி ஓடினர். அதன் பிறகு பஸ் மீது பெட் ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமானது.

இதையடுத்து மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இரவு நேர பஸ்கள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத்தொடங்கின. அப்போது இன்று காலை யிலும் சில இடங்களில் பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். தீ வைப்பு மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடிவரு கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதியில் நேற்று முன்தினம் 10 பஸ்கள் கல் வீச்சில் சேதம் அடைந்தன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர் பாக 20 பேரை போலீ சார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

கல்வீச்சு சம்பவத்தை யொட்டி கடலூரில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2-வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவ திக்குள்ளாயினர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைப் பாளர் மாரியப்பன், லெனின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 அரசு டவுன் பஸ்கள் உடைக்கப்பட்டன. இதே போல் அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

No comments: