Monday, January 12, 2009

விப்ரோ உள்பட 5 நிறுவனங்கள் முறைகேடு: உலக வங்கி தடை

முறைகடுகளில் ஈடுபட்டதால், "விப்ரோ'' உள்பட 5 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடந்தது வெளிப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுவதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சத்யம் நிறுவனத்தை, உலக வங்கி 8 ஆண்டுகளுக்கு தடை செய்து உள்ளது.

இந்த நிலையில், மேலும் 5 நிறுவனங்கள், பல முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்து இருக்கிறது. அந்த நிறுவனங்கள் வருமாறு:-

1. விப்ரோ டெக்னாலஜிஸ். 2. மெகா சாப்ட், 3. நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், 5. கேப் இண்டர்நேஷனல், 5. சுரேந்திரா சிங்.

இவற்றில் நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், கேப் இண்டர் நேஷனல் ஆகியவை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்ல. சுரேந்திரா சிங், தனி நபர் ஆவார்.

இந்த 5 நிறுவனங்களுக்கும் 2011-ம் ஆண்டு வரை உலக வங்கி தடை விதித்து இருக்கிறது. இந்த 5 நிறுவனங்களும், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாலும், பல விதிமுறைகளை மீறி இருப்பதாலும், இந்த நடவடிக்கையை உலக வங்கி மேற்கொண்டு இருக்கிறது.

இதன்படி, தடை செய்யப்பட்ட 5 நிறுவனங்களும், உலக அளவில் பல்வேறு காண்டிராக்ட்களை நேரடியாக பெற முடியாது.

இதுகுறித்து விப்ரோ, மெகா சாப்ட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக வங்கியின் இந்த அறிவிப்பால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வருவாய் இழப்பு ஏற்படாது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் சர்வதேச அளவில் 100 நிறுவனங்களை உலக வங்கி தடை செய்து இருக்கிறது. இதில், குர்பிரீத் சிங் மாலிக், விக்ரம் தீபக், கமல் ஷர்தா, ஷர்தா இபெக்ஸ், லாப் சிங் கில், லாப் யுனிவர்சல், பிரதீப் மேனன், சிவ்ஷங்கர் நாயர், பிரதீப் எஸ்.நாயர், மன்தீப் எஸ்.சந்து போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், அவர்களது நிறுவனங்களும் உள்ளன.

No comments: