Wednesday, December 24, 2008

இன்றைய அதிகாலை

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர் தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ரஜினி

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி?

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு:ம‌ன்மோக‌ன் சிங் குற்ற‌ச்சாட்டு

புதுவை போலீசார் போராட்டம்:மத்திய ரிசர்வ் போலீசார் 300பேர்

வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை

கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு -

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ராஜினி

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருத்து

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

ந‌ட்ச‌த்திர‌மாய் வெளிச்சமிடும் அடையாளங்களாய் திகழவேண்டும்!

கிறிஸ்ம‌ஸ் ம‌ர‌ம்....! - ஆல்ப‌ர்ட், விஸ்கான்சின், அமேரிக்கா

பாகிஸ்தான் மீது எவ்வித நடவடிக்கைக்கும் இந்தியா தயார்-பிரணாப்
எச்சரிக்கை

மண் மணம் மாறாத "கோவா'

எருமையில் கமல் நிர்வாணமாக சாவாரி.

ஜனவரி 10 முதல் 'சங்கமம்': கனிமொழி
அறிவிப்பு

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர்
தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட
விமர்சனம்

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

மகரஜோதி - 1 : சிங்கை கிருஷ்ணன்

அருணாச்சல மகிமை - 2 : சிங்கை கிருஷ்ணன்
இந்தியாவின் 'கெடு'நாளை முடிவு: பாகிஸ்தானுடன் போர் மூளுமா?
தலிபான் தீவிரவாதிகளால் தமிழக சமையல்காரர் கடத்தல்

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க :