Sunday, May 24, 2020

எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !

உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் சார்ந்துள்ள மதங்கள், சாதிகள் சக்தி வாய்ந்தவைகளா? உலகத்துக்கே தலைவன் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகள் சக்தி வாய்ந்தவைகளா? அல்லது பணம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களா? உலகம் முழுக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள். கரோனாவால் கொத்துக்கொத்தாக மடியும் அமொிக்க மண்ணில் அடுத்த அடி ‘டோனேடோ’ எனும் கடும்புயல். உயிர்ப்பலி, வீடு, குடும்பம், மின்சாரம், இணையம், உணவு இப்படி எல்லாம் இழந்து இயற்கைச் சீற்றத்திற்கு ஆளான மக்கள் ஒருபுறம். இச்சூழலில், அங்கிருந்து வரும் அமொிக்க வாழ் தமிழர் ஒருவரின் உடைந்த குரல். - நவின் சீதாராமன்