Saturday, January 17, 2009

திருமாவளவன் உண்ணாவிரதம் :3 வது நாளாக தொடர்கிறது

இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சாகும்வரை இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று 3-வது நாளாக உண்ணா விரதம் இருந்தார். உண்ணா விரத மேடையிலேயே 2 நாட்களாக படுத்து தூங்கினார். கட்சி தொண்டர் களும் அவருடன் சேர்ந்து மேடையில் தூங்கினார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக அறப்போராட்டம் நடத்தி வரும் திருமாவள வனை கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ், வைகோ, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் செல்போன் மூலம் வாழ்த்து கூறினார்கள்.

3-வது நாளாக இன்று உண்ணாவிரதத்தை திருமாவளவன் தொடர்ந்தால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். டாக்டர்கள் குழு மருத்துவ பரி சோதனை செய்தது. அவ ருக்கு 11 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரத்த அழுத்தம் மட்டும் குறைவாக இருந்தது. ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்து வருகிறார்கள்.

இதற்காக டாக்டர்கள் குழு ஒன்று உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்சுடன் தயாராக இருக்கிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்து சினிமா இயக்குனர்கள், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக காந்திய வழியில் நான் உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளேன். இதை டெல்லியில் உள்ள காங்கிரசார் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் கலைஞர் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆனாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்குதுணை நிற்கிறது. இது தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் செயலாகும். மத்திய அரசை கெஞ்சி கேட்கிறேன். முல்லைத்தீவில் சாவின் விளிம்பில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 5 லட்சம் தமிழர்கள் உயிருக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும்.வ்வாறு அவர் கூறினார்.

No comments: