Wednesday, January 21, 2009

"சவால்களை சமாளிப்போம்;புதிய அமெரிக்காவை உருவாக்குவோம்:" ஒபாமா முழக்கம்

சவால்களை சமாளித்து புதிய அமெரிக்காவை உருவாக்கும் பணியை இன்று முதல் தொடங்குவோம் என்று, புதிய அதிபராக பதவியேற்ற ஒபாமா உறுதியுடன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்ற பராக் ஒபாமா, விழா மேடையில் எழுச்சி உரையாற்றினார். அவர் கூறியதாவது-

"மிகப்பெரிய நெருக்கடிகளுக்கும்,சவால்களுக்குமிடையில் நாம் இருக்கிறோம். நமது பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. அனைத்து சவால்களையும் சமாளித்து புதிய அமெரிக்காவை நிர்மாணிக்கும் பணியை இன்று முதல் தொடங்குவோம்.

தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் பொறுப்புணர்வு என்ற புதிய சகாப்தம் அவசியம். அமெரிக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

தீவிரவாதத்தை தோற்கடித்து சிறப்பான வரலாற்றை உருவாக்குவோம். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றி அந்த நாட்டு மக்களிடமே ஈராக்கை ஒப்படைப்போம். ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் என அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் நாடு அமெரிக்கா.

முஸ்லிம் நாடுகளை பொறுத்தவரை பரஸ்பர நலன்-மரியாதை அடிப்படையிலான புதிய வழிமுறை ஒன்றை காண்பது அவசியம்.''

இவ்வாறு ஒபாமா கூறினார்.

No comments: