Monday, January 19, 2009

திருமாவளவன்,ராமதாசுக்கு கலைஞர் கண்டனம் தெரிவிக்கவில்லை: திமுக விளக்கம்

தொல்.திருமாவளவனுக்கும், டாகடர்.ராமதாசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவ்வாறு ஊடகங்களில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் திமுக தலைமைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.


ஈழப்பிரச்சனை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகட்சித் தலைவர் தொல்.திருமாவளன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய போது அவரும், பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாசும் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பதாக இன்றைய மாலை ஏடுகளில் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஈழப்பிரச்சனை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் டாக்டர்.ராமதாசுக்கும், திருமாவளவனுக்கும் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும்,மாலை ஏடுகளில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: