Friday, January 16, 2009

பலத்த பாதுகாப்புடன் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பலத்த பாதுகாப்புடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஜல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌க்கு தடை ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி இ‌ந்‌திய ‌வில‌ங்குக‌ள் நல அமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் அ‌ண்மை‌யி‌ல் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க்கொ‌ண்டு சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.இதனை அடுத்து இ‌ப்போ‌ட்டியை ‌சிற‌ப்பாகவு‌ம், பாதுகா‌ப்பாகவு‌ம் நட‌‌த்துவது கு‌றி‌த்த ஆலோசனை‌க் கூ‌ட்ட‌ம் மதுரை மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்றது.அதன்படி இன்று காலை 10 ம‌ணி‌க்கு தொட‌ங்கிய போ‌ட்டி மாலை 5 ம‌ணி வரை நடைபெறு‌கிறது. போ‌ட்டியையொ‌ட்டி கூடுத‌ல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் தலைமை‌யி‌ல் 9 துணை‌க் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள், 27 ஆ‌ய்வா‌ள‌ர்க‌ள், 65 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள், 719 காவல‌ர்க‌ள், 80 ஊ‌ர்‌க்காவ‌ல் படை‌யின‌ர் என சும‌ா‌ர் ஆ‌யிர‌ம் பே‌ர் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌பட்டு‌ள்ளன‌ர்.
போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் இளைஞ‌ர்க‌ள் மது அரு‌ந்‌‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்களா எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றிய ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட்ட ‌பிறகே அவ‌ர்க‌ள் போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்க அனும‌தி‌க்க‌ப்பட்டிருப்பதாக போ‌ட்டி அமை‌ப்பா‌ள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, பாலமேடு, அவனியாபுரம், கிடாரிபட்டி, மேலூர், அழகர்கோவில், நத்தம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 900 காளைகள் வந்திருந்தன. அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டு போட்டிக்கு தயார்படுத்தப்பட்டன.
இதேபோல மாடுபிடி வீரர்களாக 500 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதி முறைகள் கடைபிடிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரியத்தினர் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீடியோ படமும் எடுத்தனர்.
வாடிவாசலுக்கு வெளியே பதிவு செய்த அடையாள பனியன் அணிந்திருந்த மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர். அவர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை துரத்திச் சென்று திமிலை பிடித்து அடக்க முயன்றனர். ஆனாலும் அந்த காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை ஆக்ரோஷத்துடன் முட்டி தூக்கி வீசியது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடி கொடுக்காமல் சென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டடு‌ள்ளன‌ர்.

No comments: