Saturday, January 24, 2009

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்:3-ம் நாள்

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் : ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் கடந்த மூன்று நாட்களாக தொடர்கிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் உண்ணாவிரதம் என்றால் மீடியா நண்பர்கள் குவிந்திருப்பர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் மாற்றி மாற்றி செய்தி வெளியிடுவர். ஆனால் இந்த அறப்போராட்டம் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி நடைபெற்றுக்கொண்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார்
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களைகைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

No comments: