Friday, January 16, 2009

ராமலிங்க ராஜூக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் இன்று முடிவு

இந்தியா மட்டுமல்லாது அகில உலக ஐ.டி.துறையினரையே அதிர்ச்சியில் உறைய வைத்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்த்தின் நிறுவனர் மற்றும் நிவாக இயக்குனருமான ராமலிங்க ராஜூ,அவருடைய சகோதரர் ராமராஜூ,முதன்மை நிதி நிர்வாகி வத்லாமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது.
7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. . ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மேலும் அவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்கின்றனர்.இது தவிர அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
செபி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை தாம் எதிர்க்கப் போவதாக ராஜுவின் வழக்கறிஞர் பரத்குமார் கூறியுள்ளார்.ராஜு ஜாமீனில் வெளிவந்த பிறகு அவரிடம் செபி விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று தாம் நீதிமன்றத்தில் கூறப்போவதாக அவர் தெரிவித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபத்தை செயற்கையாக உயர்த்தி 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததை அதன் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: