Wednesday, January 21, 2009

ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு வழக்கு

பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கில சினிமா படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஆலிவுட்டின் தங்க பூமி விருதைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மீதும், படத்தில் நடித்த அனில்கபூர் மீதும் பாட்னா நகர கோர்ட்டில் தபேஷ்வர் விஸ்வகர்மா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

`ஸ்லம்டாக் மில்லியனர் சினிமா, குடிசையில் வசிக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மனித உரிமைகளை மீறுவதாகும்' என்று பாட்னா நகர தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடிசையில் வாழ்வோர் கூட்டு நடவடிக்கை குழு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ள தபேஷ்வர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தனது தரப்பு ஆதாரங்களை தபேஷ்வர் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய மாஜிஸ்திரேட்டு ரவீந்திர சிங்குமார் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: