Saturday, January 17, 2009

சத்யம் இயக்குனர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பரபரப்பான சூழ்நிலையில் சத்யம் நிறுவன இயக்குனர்கள் கூட்டம் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆறு புதிய இயக்குனர்களை நியமித்துள்ளது.அக்குழுவின் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களின் சுகாதார காப்பீட்டுக்கு செலுத்த 150 கோடி ரூபாய் தேவை என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உயரதிகாரி ராம் மைனாம்பதி கோரியிருந்த நிலையில் இன்றைய இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இயக்குனர் குழுவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கேபிஎம்ஜி நிறுவனத்தை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆடிட்டர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு ஐசிஏஐ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

No comments: