Wednesday, June 25, 2008

அண்ணா பல்கலைகழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனத்தில், வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தற்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்போகிறாரா? அல்லது அரசு தரப்பு நிர்பந்தத்துக்கு பணிந்து புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதனின் பதவிக்காலத்துக்குப் பின் அடுத்த துணைவேந்தரை நியமிக்க பரிந்துரை செய்யும் குழுவை நியமனம் செய்திருந்தனர். குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, உலகத் தரத்திற்கு அதன் செயல்பாடுகளை உருவாக்கியவர் விஸ்வநாதன்.

இவரது பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் முடிவ டைகிறது. விஸ்வநாதனின் பதவியை நீட்டிப்புச்செய்யவோ, புதிய துணைவேந்தரை பரிந்துரைக்கவோ 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், அரசுத் தரப்பில் மிரட்டப்படுவதாக புகார் எழுந்தது.

அரசுத் தரப்பிலிருந்து புதிய துணைவேந்தருக்கான பட்டியலையும் குழுவினரிடம் அளித்துள்ளனர். ஆனால் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் தற்போதைய துணைவேந்தர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பரிந்துரைக்கவே விரும்பினர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் தற்போதைய துணை வேந்தர் விஸ்வநாதன் பதவியை நீட்டிக்கவே விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுவினர் மிரட் டப்பட்டு அரசு தரப்பில் அளிக்கப்படும் பட்டியலில் உள்ள 3 பேரை புதிய துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் http://www.adhikaalai.com/index.php?/en/சிறப்புக்கட்டுரை/சிறப்புக்கட்டுரை/அண்ணா-பலகலைகழகத்தின்-அடுத்த-துணைவேந்தர்-யார்

Thursday, June 19, 2008

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி.

தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும்.

கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.