Friday, January 16, 2009

அமெரிக்காவுக்கு ஆபத்து நீங்கிவிடவில்லை: புஷ் இறுதி உரை

அமெரிக்காவுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நீங்கிவிடவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாம வரும் 20 -ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில் நாட்டு மக்களுக்கு புஷ் தொலைக் காட்சியில் பிரியாவிடை உரையாற்றினார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அமெரிக்கா பாதுகாப்பாக உள்ளது என்ற போதிலும், எந்த நேரத்திலும் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிரிகள் இன்னொரு தாக்குதல் நடத்தும் உறுதியுடன் பொறுமையாக சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறினார்.கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூர்ந்த புஷ், அதன் பின்னர் அமெரிக்காவை பாதுகாக்க தாம் மேற்கொண்ட முடிவுகளையும் பட்டியலிட்டார்.
இந்தப் பிரச்சனைகளை அமெரிக்கா ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறிய அவர், எனினும் இதனை சமாளிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.அமெரிக்கா ஒருபோதும் தளர்ச்சி அடையாது, தோல்வி அடையாது யாரிடமும் விழாது என்று புஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் மேற்கொண்ட சில கடுமையான முடிவுகளை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் என்ற போதிலும், இந்த முடிவுகளை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

No comments: