Wednesday, June 25, 2008

அண்ணா பல்கலைகழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனத்தில், வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தற்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்போகிறாரா? அல்லது அரசு தரப்பு நிர்பந்தத்துக்கு பணிந்து புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதனின் பதவிக்காலத்துக்குப் பின் அடுத்த துணைவேந்தரை நியமிக்க பரிந்துரை செய்யும் குழுவை நியமனம் செய்திருந்தனர். குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, உலகத் தரத்திற்கு அதன் செயல்பாடுகளை உருவாக்கியவர் விஸ்வநாதன்.

இவரது பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் முடிவ டைகிறது. விஸ்வநாதனின் பதவியை நீட்டிப்புச்செய்யவோ, புதிய துணைவேந்தரை பரிந்துரைக்கவோ 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், அரசுத் தரப்பில் மிரட்டப்படுவதாக புகார் எழுந்தது.

அரசுத் தரப்பிலிருந்து புதிய துணைவேந்தருக்கான பட்டியலையும் குழுவினரிடம் அளித்துள்ளனர். ஆனால் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் தற்போதைய துணைவேந்தர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பரிந்துரைக்கவே விரும்பினர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் தற்போதைய துணை வேந்தர் விஸ்வநாதன் பதவியை நீட்டிக்கவே விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுவினர் மிரட் டப்பட்டு அரசு தரப்பில் அளிக்கப்படும் பட்டியலில் உள்ள 3 பேரை புதிய துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் http://www.adhikaalai.com/index.php?/en/சிறப்புக்கட்டுரை/சிறப்புக்கட்டுரை/அண்ணா-பலகலைகழகத்தின்-அடுத்த-துணைவேந்தர்-யார்

No comments: